
ஐரோப்பிய நாடுகளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையிலான ஒற்றையாட்சி – (ஏக்கிய ராஜ்ய) யாப்புக்கு எதிரான தொடர் உரையாடல் இன்று 15.01.2026 வியாழக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சில் லுபுளோமெனில் பகுதியில் இடம்பெற்றது.

“இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றுவரும் குறித்த சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஒற்றையாட்சி – (ஏக்கிய ராஜ்ய) யாப்புக்கு எதிரான முக்கிய விடயங்களைத் தெளிவுபடுத்தியிருந்ததுடன் மக்களின் கேள்விகளுக்கும் பதில் வழங்கியிருந்தனர்.








