கிளிநொச்சியில் கோரவிபத்து: நால்வர் சம்பவ இடத்திலேயே பலி!

0
42

கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்..

குறித்த விபத்து இன்று 12.01.2025 மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது, மகிழுந்தில் பயணித்த நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பொன்னையா பூபாலன், 34 வயதுடைய சந்திரகுமார் சவேந்திரன் புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குணதர்ஷன், அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய யுவானி பிரசாத் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here