பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த சுண்டாட்டம் (கரம்) போட்டி!

0
94

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை மாவீரர் நினைவு சுமந்து நடாத்தும் சுண்டாட்டம் (கரம்) இன்று 11.01.2026 ஞாயிற்றுக்கிழமை நுவாசி லு செக் என்னும் இடத்தில் நடைபெற்றது.

மாவீரர் ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது. ஈகைச்சுடரினை 29.12.1992 அன்று மன்னார் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ஆம் லெப்டினன் அமலன் அவர்களின் சகோதரி ஏற்றி வைத்தார்..

அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டி ஆரம்பமானது. இன்றைய போட்டியில் மொத்தம் 13 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here