
பிரான்சில் உள்ள தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் 27 ஆவது முத்தமிழ் விழா புதிய ஆண்டின் முதலாவது நிகழ்வாக இன்று (03.01.2026) சனிக்கிழமை சவினி லுத்தொம் பகுதியில் உள்ள மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்ற இந்நிகழ்வில் இன்னியம் அணிவகுப்புடன் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
விருந்தினர்களாக சவுனி லு தொம் பகுதி மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மற்றும் அதன் உபகட்டமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களினால் மங்கல விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ்ச் சோலை கீதம் இசைக்கப்பட்டு,
தமிழ்ச்சோலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன.
10 வருடங்கள், 20 வருடங்கள், நிறைவுசெய்த ஆசிரியர்கள், வளர் தமிழ் 12 ஆம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் மதிப்பளிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் நிகழ்வுகளைக் கண்டுகளித்ததைக் காணமுடிந்தது.
(மேலதிக தகவல்கள் விரைவில்)
































