இவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு!

0
117

இவ்றி பிராங்கோ தமிழச்சங்கம் தனது 30 ஆவது ஆண்டு தமிழ்ச்சோலை நிகழ்வை கடந்த 27.12.2025 சனிக்கிழமை நடாத்தியிருந்தது. 12.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு இரவு 8.00 மணிவரை நடைபெற்றிருந்தது.

மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடர் மாவீரரின் சகோதரி ஏற்றிவைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரதம விருந்தினர்கள் மங்கல விளக்கினை ஏற்றி ஆரம்பித்து வைத்தனர். தமிழ்ச்சோலைக்கீதம் மாணவர்களால் பாடப்பட்டது. வரவேற்பு நடனம், மலர் வணக்க நடனம், தமிழ்மொழிப்பாடல் நடனம், பட்டிமன்றம், எழுச்சி பாடல் நடனம் கரோக்கி மாவீரர் பாடல், கற்பகதரு பற்றிய பாடலும் நடனமும் , தமிழ்மொழி பற்றிய பேச்சுகளும், கவிதைகளும் ஆசிரியர்களால் மாணவர்களால் பயிற்சியளிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தன.

நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா தமிழ்ச்சங்க கூட்டமைப்பு துணைப்பொறுப்பாளர் திரு. அருணன். தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. நாகயோதீஸ்வரன் மற்றும் ஏனைய பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினர் நிர்வாகிகள் ஏனைய கட்டமைப்புப் பிரதிநிதிகள் என பலரும் பங்கு பற்றியிருந்தனர்.

சிறப்புரையை வழங்கிய பரப்புரைப் பொறுப்பாளர் இந்த 30 வருடகால முதன்மைச்சங்கங்களில் இவிறி தமிழ்ச்சங்கமும் ஒன்று என்பதையும், தமிழீழ தேசத்தை எதிர்பார்த்து தூரநோக்கு சிந்தனையில் உருவான தமிழ்ச்சங்கங்களின் செயற்பாட்டில் 30 வருடகால இவ்றிதமிழ்ச்சங்கமும், தமிழ்ச்சோலையும் தங்களின் அளப்பரிய கடமையைச் செய்து வந்திருக்கின்றார்கள். இதற்கு எமது மக்களும் பெரும் உதவியாக இருந்துள்ளனர் என்றும் அவர்களை இதயமுற வாழ்த்தியிருந்தார். இன்றும் புலம் பெயர் தமிழர்கள் வாழ்வில் அரசியல் என்பது இரண்டற கலந்துள்ளது என்பதை அதனை பகுத்து ஆராய்ந்து எமது இனத்தின் விடுதலைக்காக பயன்படுத்தவேண்டும், அரசியல் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அதற்கான வாக்குப்பலம் எம்மிடம் உள்ளது என்றும் அதனை மார்ச் மாதம் நடைபெறவுள்ள மாநகரசபைத் தேர்தலில் எமது மக்கள் சென்று வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

. திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வின் சார்பிலும், தமிழ்ச்சோலையின் சார்பில் அதன் பொறுப்பாளர் திரு. நாகயோதீஸ்வரன் அவர்களும், தமிழச்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக திரு. அருணன் அவர்களும் திருவள்ளுவர் சிலை வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.

நிகழ்வின் இடைவேளையின் போது வருகை தந்திருந்த இவ்றி மாநகர முதல்வர், மற்றும் வரப்போகும் தேர்தலில் போட்டியிடவுள்;ள பிரதிநிதியும், மற்றும் மாநகர முக்கிய உறுப்பினர்களும் வருகை தந்திருந்ததுடன். மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கியதோடு உரைகளையும் ஆற்றியிருந்தனர். இதில் முக்கியமாக பிராங்கோ தமிழச்சங்கத்தின் இந்த 30 வருடகால பணியில் இவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராய் இருந்து பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்ற திரு. பாலகுமாரன் அவர்களும், தமிழ்ச்சோலையின் நிர்வாகியாய் இருந்து வரும் திரு.சட்டநாதன் அவர்களும் மக்களின் மாணவர்களின் கரகோசத்துடன் மாநகர முதல்வர்களால் நினைவுச்சின்னம் கொடுக்கப்பட்டு மதிப்பளிப்பு செய்யப்பட்டனர்.
நிகழ்வில் ஆசிரியர்கள், இளம் மாணவர்கள் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.
ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் ஆக்கங்கள் வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது; கடந்த காலங்களைவிட இந்த ஆண்டு அதிகமான மக்களும் குழந்தைகளும் கலந்து கொண்ட இந்த
ஆண்டுவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here