
யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் கடலில் நீராடிய போது இளைஞர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டார் , அவரை தேடும் பணிகள் இடம் பெற்றது இன்றைய தினம் திங்கட்கிழமை தாளையடி கடற்பகுதியில் இளைஞரின் சடலம் கரையோதுங்கியுள்ளது
சம்பவத்தில் ஆழியவளை பகுதியைச் சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் , சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுளளது மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்


