
பிரான்சு சோதியா கலைக் கல்லூரியின் நத்தார் விழா 2025 அதன் புதிய மண்டபத்தில் சனிக்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரியின் பிரதம நிர்வாகி திரு.செல்வகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை மூத்த ஆசிரியர் திருமதி அன்பரசி அவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி ஆரம்பித்துவைத்தார்.
தொடர்ந்து அகவணக்கத்தோடு ஆரம்ப உரையாற்றிய பிரதம நிர்வாகி அவர்கள் தனது உரையில், இன்று பள்ளியின் இரண்டாவது நிகழ்வாக புனரமைக்கப்பட்ட புதிய மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றதையிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆசிரியர்களின் சார்பிலான உரையும் இடம்பெற்றதுடன், நத்தார் தாத்தா அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தார்.
அடுத்து நிகழ்வில் வரவேற்பு நடனம், பேச்சு, நத்தார் கீதங்கள் இசைக்க கலந்துகொண்ட அனைவரும் சிற்றுண்டி, குளிர்பானங்கள் அருந்தி கலந்துரையாடி மகிழ்ந்துசென்றனர்..









