ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் நினைவஞ்சலி நேற்றைய நாள் மணற்காட்டு கிராமத்தில் அமைந்த நினைவிடத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள் மற்றும் பிரதேசசபை கௌரவ உறுப்பினர் அகஸ்ரின் சேர் மற்றும் கிராம பொதுக்கட்டமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியிருந்தார்கள்.





