
ஆழிப்பேரலை பேரழிவின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், இன்று 26.12.2025 வெள்ளிக்கிழமை யாழ்.வடமராட்சி கிழக்கு. உடுத்துறை
சுனாமி நினைவாலயம்- அமைந்துள்ள இடத்தில் உணர்வோடு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் அகவணக்கம் இடம்பெற்று, ஆழிப்பேரலையில் காவுகொள்ளப்பட்ட தமது உறவுகளுக்குக் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதைக் காணமுடிந்தது..















