
ஆஸ்திரேலியாவில் உடல்நலக் குறைவால் சாவடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் மகளிர் படையணி முன்னாள் போராளி வைதேகி அவர்களின் புகழுடலுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆஸ்திரேலியா கிளையினால் தமிழீழ தேசியக்கொடி போர்த்து மதிப்பளிக்கப்பட்டது.






தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் மகளிர் படையணியில் தேசவிடுதலைக்காக பல களங்கள் கண்டு, பல்துறை பணிகளிலும் இறுதிவரை பயணித்த பெண் போராளி வைதேகி (இராசநாயகம் துசியந்தி தீபவர்ணன்) (வயது 44) அவர்கள் நேற்று 23.12.2025 செவ்வாய்க்கிழமை சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சாவடைந்தார்.
அவருடைய இறுதிவணக்க நிகழ்வு ஆஸ்திரேலியாவில்.. இன்று 24.12.2025 புதன்கிழமை இடம்பெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆஸ்திரேலியா கிளையின் சார்பில் தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளித்து அறிக்கையும் வாசித்தளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பலரும் தமது இரங்கலைத் பதிவு செய்தனர்.

வைதேகி அவர்களின் புதல்வன் அங்கு தெரிவிக்கையில், எனது அம்மா எனக்குக் கற்றுத்தந்தது எல்லாம், அனைவருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே
அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்று கண்ணீர்மல்கத் தெரிவித்தமை அனைவரையும் கண்ணீர்மல்கவைத்தது.
வைதேகி அவர்களின் கடந்துவந்த பாதை காணொளியில் விவரமாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
இறுதியாக வைதேகி அவர்கள் எழுதியிருந்த நன்றிக் கடிதமும் கண்ணீரோடு மண்டபத்தில் வாசித்தளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





(எரிமலை செய்திப் பிரிவு)
முழுமையான இறுதி வணக்க நிகழ்வு காணொளி இங்கே அழுத்தவும்.



