
இன்று பிற்பகல்(23.12.2025) 3.15 மணியளவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கும் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தம் ஒருபோதும் தமிழ்மக்களுக்கு தீர்வாக அமையப்போவதில்லை. எனவே ஒற்றையாட்சி முறைமை நீக்கப்பட்டு சமஸ்டி அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என்ற கருத்தினை தமிழ்த் தேசிய பேரவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இச்சந்திப்பில் கலந்துகொண்ட கஜேந்திரக்குமார் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இதில் கலந்துகொண்ட ஏனையவர்கள் 13 ஆம் திருத்தம்பற்றி மாத்திரமே மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


