
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் வன்முறையில் இறங்கியதுடன் அவர்களைக் கைது செய்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இன்று 22.12.2025 திங்கட்கிழமை போராட்டத்தில் குதித்தனர்.

யாழ்.பல்கலை நுழை வாயிலில். ஒன்றுகூடிய மாணவர்கள், குறித்த தையிட்டி வன்முறைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு கோசம் .எழுப்பினர்.

அங்கு திரண்ட ஊடகங்களுக்கும் தமது போராட்டத்தின் நோக்கம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

மாணவர்களின் எழுச்சி என்பது ஒர் இனத்தின் விடுதலைக்கு உன்னதமானது. அதனை சிங்களப் பேரினவாதம் கடந்து வந்த காலங்களில் இராணுவம் மற்றும் காவல்துறை களின் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கியமை நினைவில் கொள்ளத்தக்கது.



