
நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) முன்னெடுக்கப்பட்ட தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட போது சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் தாக்கப்பட்டிருந்தார்.
நேற்று மாலை மல்லாகம் பதில் நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் பலாலிப் காவல்துறையினரால் முற்படுத்தப்பட்டிருந்த வேளை அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.


