வடக்கு – கிழக்கில் மழை நிலைமை தொடரும் அபாயம்!

0
52

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாளைய (18) தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பு தொடர்பாக இன்று (17) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here