ஜேவிபி ஆட்சியாளர்கள் Protection of the State from Terrorism Act No. 2026 எனும் புதிய பயங்கரவாத சட்டம்!

0
96

ஜேவிபி ஆட்சியாளர்கள் Protection of the State from Terrorism Act No. 2026 என்கின்ற பெயரில் புதிய பயங்கரவாத சட்ட முன்மொழிவொன்றை (Bill) வெளியிட்டு இருக்கின்றார்கள்

தற்போதைய Prevention of Terrorism Act (PTA) க்கு பதிலீடாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய முன்மொழிவின் அடிப்படையிலும் பயங்கரவாதம் தொடர்பான தெளிவான வரைவிலக்கணம் (Broad and Vague) வழங்கப்படவில்லை

குறிப்பாக இறையாண்மையை மீறுதல் (Violate Sovereignty), அச்சுறுத்துதல் (Intimidate the Public), அரசாங்கத்தை கட்டாயப்படுத்தல் (Compel the Government) உட்பட பல்வேறு விடயங்கள் பயங்காரமாக்கப்பட்டுள்ளது

இதனூடாக PTA போலவே இங்கும் மிக சாதாரண அரசியல் கருத்து வேறுபாடுகளை கூட பயங்கரவாதமாக (Political dissent and Free Speech) சித்தரிக்க கூடிய போதிய இடைவெளிகள் இருக்கின்றது

இராணுவ அதிகாரிகளுக்கு சந்தேகத்தின் பேரில் (Reasonable Suspicion) பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி , அவர்களின் உடமைகளை பரிசோதிக்கவும், பறிமுதல் செய்யவும் வெளிப்படையாக அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது .

அதே போல புதிய சட்டமூலத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர் ஒருவரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவை பெற்று ஒரு வருடம் வரை (12 மாதங்கள்) தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றது

பொலிஸ் மா அதிபர் அல்லது பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்படி தடுத்து வைப்பதற்கான உத்தரவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து பெற்று கொள்ள வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது

அதாவது PTA யின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவை பெற்று 18 மாதங்கள் தடுத்து வைத்திருக்க ஏற்பாடுகளிருந்த நிலையில் தற்போது புதிய முன்மொழிவின் கீழ் 12 மாதங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் கீழ் தடுத்து வைக்க ஏற்பாடுகள் உள்ளது

அதே நேரம் புதிய முன்மொழிவின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலய நேரத்தில் பொலிஸ் மா அதிபர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தகவல் தர வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது

ஆனால் இதுவொரு மிக பலவீனமான ஒரு ஏற்படாகவே (Just a Paperwork) இருக்கின்றது .

அதாவது இவ் புதிய ஏற்பாடுகள் ஊடக எந்தவொரு Judicial Review க்கோ அல்லது தடுத்து வைப்பதை தடுப்பதற்கோ எந்த வாய்ப்புகளும் இல்லை

அதே நேரம் புதிய சட்ட முன்மொழிவின் கீழ 20 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை தண்டனை (Harsher Punishments) வரை மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட கூடிய ஏற்பாடுகள் இருக்கின்றது

விசேடமாக வன்முறைசாராத (Non-Violent Offences) சாதாரண பிரச்சாரம் (Propaganda) கூட பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு அது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை செல்ல வேண்டியிருக்கும்

பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்குவதாக அதிகாரத்திற்கு வந்துள்ள ஜேவிபி தற்போது முன்வைத்துள்ள புதிய சட்ட முன்மொழிவு PTA யின் Stricter and more Expansive வடிவமாக இருக்கின்றது

குறிப்பாக எண்ணிக்கையில் சிறிய தேசங்களை சேர்ந்த மக்களை புதிய பெயரில் இலக்கு வைத்து துன்புறுத்த போகின்றார்கள்

-இனமொன்றின் குரல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here