
தற்போது திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுக் கிணறுகள் பகுதியில் புதிதாக புத்தர் சிலை நிறுவப்பட்டிருப்பது தமிழர் வரலாற்றை அழிக்கவும் அதன் அடையாளத்தை நிரந்தரமாக மாற்றவும் நடக்கும் சதிவேலையின்
மிகத் தெளிவான ஆதாரமாகும்
நேற்று வரை நுழைவுச்சீட்டில் மட்டுமே “பௌத்த வளாகம்” எனக் குறிப்பிட்டவர்கள் இன்று ஒரு புத்தர் சிலையையே நிலைநிறுத்தி உள்ளனர்
திட்டமிட்ட வரலாற்று திரிப்பு
கன்னியா என்பது இராவணன் மற்றும் தமிழ் மரபுகளுடன் தொடர்புடைய ஒரு தொன்மையான இடமாகும்.
நுழைவுச்சீட்டில் “அநுராதபுர கால பௌத்த வளாகம்” என அச்சிட்டு நிர்வாகரீதியாக உரிமை கோரல்

தற்போது புத்தர் சிலையை நிலைநிறுத்தி இது ஓர் பௌத்த மத வளாகம் என்ற தோற்றத்தை வலுப்படுத்துவதுடன் எதிர்காலத்தில் தமிழர் உரிமை கோரலை சட்டரீதியாக நீக்குவது
விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம்
யார் சொன்னது அவர்கள் “மோட்டு சிங்களவர்” என்று? அவர்கள் மிகவும் தெளிவாகத்தான் உள்ளார்கள் எமது நிலம் அடையாளம் வரலாற்றை பறிப்பதில் அவர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள் ஆனால் நாம் தான் எமது சிந்தனைகளை இலகுவாகச் சிதறவிட்டு வேடிக்கை பார்க்கிறோம்.
எமது பாரம்பரியத் தலங்களில் நிகழும் இத்தகைய மாற்றங்கள் குறித்து நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருப்பதுடன் உலகறியச் செய்ய வேண்டும்.

எமது மண் எமது வரலாறு
ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது.


