மட்டு கிரானில் உந்துருளி விபத்தில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் பலி!

0
72

மட்டக்களப்பு கிரானில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிக்கி மட்டு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் இரண்டு மணியளவில் வாழைச்சேனை காவல்தூறை பிரிவுக்குட்பட்ட கிரான் கும்புறுமூலைச் சந்தியில் உந்துருளி மற்றும் டிப்பர் என்பன மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின்( Ref&AC Technician) கற்கை நெறியினைத் தொடர்ந்து கொண்டிருக்கும் கிரானைச் சேர்ந்த சுரேந்திரன் கிசாளன் என்ற மாணவரே உயிழந்தவராவார்.

மிகுந்த கெட்டித்தனமான ஒழுக்கம் மிக்க இம் மாணவன் நாளை தனது பாடநெறியைப்பூர்த்தி செய்து அதற்கான நைற்றா பயிற்சி கடிதத்தை பெற்று பயிற்சியைத் தொடர இருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இம் மாணவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்குப் பலரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here