பிரான்சில் இலத்திரனியல் உந்துருளி விபத்தில் 21 வயது யாழ். இளைஞன் உயிரிழப்பு!

0
134

பிரான்சு நாட்டில் நடந்த இலத்திரனியல் உந்துருளி மீது- மகிழுந்து மோதிய விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழ் இளைஞரான சதீஸ்குமார் அபிஷன் (வயது-21) உயிரிழந்துள்ளார்.

மகிழுந்து சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியமையே விபத்துக்கான காரணமெனத் தெரியவருகிறது. இந் நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவதினத்தன்று காலை இலத்திரனியல் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த மகிழுந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தினை ஏற்படுத்திவிட்டு 30 வயதான சாரதி தப்பிச் சென்றுள்ளார். எனினும் தான் பணியாற்றும் நிறுவன உரிமையாளரிடம் விபத்து தொடர்பில் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய உரிமையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான சாரதிக்கு மேற்கொண்ட இரத்த பரிசோதனையில் மதுபானம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விபத்தை ஏற்படுத்திய சாரதி காவல்துறை காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here