
வவுனியாவைச் சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரன் (வயது 27) என்ற இளைஞன் விபத்தில் காயமடைந்து தலையில் ஏற்பட்ட பாரிய காயத்தினால் மூளைச் சாவடைந்து உயிரிழக்கும் தறுவாயில் அவரது குடும்பத்தினர் அவருடைய இரு சிறுநீரகங்களையும் தானமாக வழங்க முடிவு செய்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த சத்திர சிகிச்சையின் மூலம் ராஜ்கிரனின் சிறுநீரகங்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டு இருவருக்கு பொருத்தப்பட்டது.
சவால் மிக்க சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சையை யாழ் வைத்தியசாலை மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.
தான் உயிரிழந்தும் தனது சிறுநீரகங்களை கொடுத்து இருவரை வாழ்வித்த ரவிராஜ் ராஜ்கிரன் என்ற இந்த இளைஞனின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்தனை செய்கின்றோம்.
(நன்றி: இணையம்)





