தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று!

0
195

தமிழீழ தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பொண்டி நகரில் இடம்பெற உள்ளது.

அன்பான தமிழீழ தேச மக்களே!
எம் உயிரான தேசியத் தலைவர் நேசித்த உன்னத மாமனிதன்;. தனக்கென வாழாது தன் இனமும், தனது சந்ததியென்று வாழ்ந்தவர் எங்கள் பாலா அண்ணர். சிங்கள இராசதந்திரிகளுக்கும், சர்வதேசத்துக்கும் சிம்ம சொப்பனமாகவும் இருந்தவர். எமது இனப்பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகித்தவர் எங்கள் பாலா அண்ணன்.. அதனால்தான் அவர் எம் “தேசத்தின் குரல்” என்ற உயர்மதிப்பைத் தமிழீழத் தேசியத்தலைவரிடம் பெற்றுக்கொண்டார்.
அவரை எண்ணி, அவரின் நினைவை நெஞ்சில் சுமந்து, நாங்களும் எங்கள் குடும்பமும்,எம் சுற்றமும், எம்மக்களும் அவர் மீது அன்பு கொண்டவர்களும் ஒன்றாகி அவர் எம்மை விட்டு உடலால் மறைந்தபோதும் உணர்வால், உயிராய் எம்மோடு இருக்கும் பாலா அண்ணருக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்கொண்டு வணக்கம் செய்வோம் வாருங்கள்.
காலம். 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 3.00 மணிக்கு MQC Georges Brassens 49/Av.Carnot 93140 BONDY மாநகரத்தில் நடைபெறவுள்ளது.
அரசியல் பிரிவு மற்றும் பரப்புரை – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here