
இலங்கையை போல இந்தோனேசியா சுமத்ராவில் நிகழ்ந்த வெள்ள பேரிடர் கிட்டதட்ட 950 பேர் இதுவரை உயிரிழந்ததாக அறிவித்துள்ளது. இன்னும் 300 பேரை புயலில் காணவில்லை என அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சுமத்ரா தீவு முழுதும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேரும் சகதியுமாக கிடக்கிறது. அரசாங்கம் வெளிநாட்டு உதவிகளை கோரியிருக்கிறது. இதிலிருந்து சுமத்ரா மீண்டு வர இன்னும் மூன்று மாதங்கள் பிடிக்கலாம் என்கிறார்கள்.
அண்டைநாடுகளான ஆசியான் நாடுகள் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பை நாடியுள்ளது இந்தோ. சுமத்ரா தீவில் தனியாக படுக்கையில் இருந்த மூதாட்டி ஒருவர் இரண்டுநாட்களாக நீரில் மிதந்தே உயிர்பிழைத்திருக்கிறார். வெள்ளம் அவர் வீட்டின் நீர்மட்டத்தை அப்படியே உயர்த்தி பிடித்ததில் பிழைத்தது பெரும் ஆச்சரியம். மறுபுறம் வலுவான பல இளைஞர்கள் தீவில் காணவில்லை என சுமத்ரா கவலையை தெரிவித்து இருக்கிறது.
இயற்கை அனர்த்தங்களுக்கும் இந்தோனேசியாவுக்கும் ஏதோ புரிந்துணர்வு ஒப்பந்தம் போல சுமத்ரா தீவின் மீது பூமியின் முக்கியமான அடுக்குகள் அமைந்திருக்கின்றன. உலகின் முக்கிய பேரிடர்கள் இங்கிருந்தே துவங்குகின்றன.
அவ்வப்போது பூமி தட்டுகளில் ஏற்படும் திடுக்கங்களும் அதிர்வுகளும் இங்கு சகஜம். பொது இடத்தில் அமர்ந்துவிடுவார்கள். இரண்டாயிரம் ஆண்டு சுனாமியில் உயிர்பிழைத்த பந்தே ஆச்சே மஸ்ஜித் அப்துர்ரஹ்மான் நீங்கள் வாழ்நாளில் பார்க்க வேண்டிய ஒன்று .
பேரிடர் நிவாரண பணிகளில் யானையை பழக்கிவிட்டுள்ளதை தி ஜகர்த்தா போஸ்ட் இன்று புகைப்படமாக வெளியிட்டிருந்தது. யானை பேரிடருக்கு பின்னால் மிஞ்சியிருக்கும் மனிதர்களையும் அவர்களது சுமைகளையும் தூக்குகிறது. உடன் அங்கு வாழ்ந்த மனிதர்களின் நினைவுகளை சுமந்த படி யானை சுமத்ரா தீவுகளில் உலாவுகிறது.
- Anisha Maraikayar


