
ஊரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதித் தஞ்சம் கோரியுள்ளார் .. அதன் பின்னர் ஜேர்மன் அதிகாரிகள் அவரை அகதி முகாமில் தங்கவைத்தனர்.
விசா இன்மை, வேலை இன்மை, தனிமை, மொழிப் பிரச்சினை, நண்பர்கள் இன்மை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரக்திக்குள்ளாகி அடிக்கடி குடும்பத்தினருக்குத் தான் மீண்டும் ஊருக்கு வரப் போகின்றேன் என்று கூறி வந்ததாக கூறப்படுகின்றது
குடும்பத்தினரும் “போன காசை உழைத்துக்கொண்டு வா…” என்று ஆறுதல் கூறியும் இளைஞர் மனவிரக்திக்குச் சென்று இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு முகாமில் தூக்கிட்டு உயிரைமாய்த்துள்ளார்.
சம்பவத்தில் ஊரெழு கிழக்குப் பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா சுகன் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை அப் பகுதிக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான இளைஞர்கள் பலர் புலம்பெயர் தேசங்களில் வாழ வழியின்றித் தவித்துக் கொண்டுள்ளனர். இவர்களை இனங்கண்டு உதவ புலம்பெயர் தேச உளவள ஆலோசனை மையங்கள் (Psychological counseling centers) முன்வரவேண்டும் என பலரும் சமூக இணையப் பரப்பில் ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.


