யாழ். பண்ணைக் கடலில் மூழ்கி 18 வயது இளைஞர்கள் இருவர் பலி!

0
82

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நீச்சலில் ஈடுபட்ட 18 வயதான நான்கு இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தில் யாழ்.கொக்குவில் ஆறுகால்மடத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் ஜெனீசன், உதயராஜா கஜந்தன் ஆகிய 18 வயதான இளைஞர்கள் இருவரே உயிரிழந்தவர்கள் ஆவர்.

யாழ், நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் சிறிய படகொன்றில் பண்ணை கடற்பகுதிக்கு சென்று , படகில் இருந்து குதித்து கடலில் நீச்சல் அடித்த போது அவர்கள் சுழிக்குள் அகப்பட்டு , கடல் நீரில் தத்தளித்த வேளை பண்ணை பகுதியில் நின்றவர்கள் அதனை அவதானித்து , யாழ்ப்பாண காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியதுடன் , மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

நான்கு இளைஞர்களையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய சூழ் நிலையில் நீர் நிலைகளில் இயங்குவதில் பொதுமக்கள் மிகவும் அவதாரமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here