
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடாத்தப்படும் தமிழ்ச்சோலை நிர்வாகிகளுக்கான செயலமர்வு, இன்று 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை திரான்சி பகுதியில், நடைபெற்றது..
காலை 9.30 மணிக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திருமிகு. நாகஜோதிஸ்வரன் தலைமையில் அகவணக்கத்துடன் தொடங்கிய நிகழ்வானது மாலை 16.30 மணியளவில் நிறைவடைந்தது.
இச்செயலமர்வில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தினை இணையப்பரப்பில் நிர்வாக மட்டத்தில் எவ்வாறு இலகுவாகக் கையாளுதல் என்பன பற்றிய தெளிவூட்டல்கள் அனுபவம் மிக்க இளையதலைமுறைப் பயிற்றுநர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு, புலன்மொழி வளத்தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வுக்கான வழிகாட்டல் விதிமுறைகள் அடங்கிய ஆவணங்களும் நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டன.




