
எந்த இனத்திற்கும் எந்தகாலத்திலும் தமிழ்இனத்திற்க்கு கிடைக்காத அரும் பெரும் தலைவன், எங்கள் இனத்தின் தாயுமானவன், காவலன்,எல்லாமுமான எங்கள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 71ஆவது பிறந்த நாளையொட்டி அவரின் சிந்தனையில் ஒன்றான “இயற்கை எனது நண்பன்..” என்ற சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அரசியல் பிரிவால் முன்னெடுக்கப்படும்” மாநகரங்களில் மரக்கன்று நடுகை“. பிரான்சில் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான புளோமினில் நகரத்தில் அங்குள்ள பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரால் முந்நாள் மாநகர முதல்வர் தற்போது பிரான்சு சென்சென்ரனி பகுதியின் அரசசபையின் சபாநாயர் அவர்களின் கைகளில் “ஒலிவ்” மரக்கன்று நேற்றைய நாள் கையளிக்கப்பட்டது.
இதில் சங்க உறுப்பினர்கள் இளையவர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.




