பிரான்சில் ‘உயிர்த்துளி’ தாயக பேரிடர் உதவித் திட்டம்!

0
198

பிரான்சில் பாரிஸ் வாழ் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ‘உயிர்த்துளி’ எனும் அவசரகால உதவித் திட்டத்தின் ஊடாக, தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாரிஸ் ‘லாகூர்நேவ்’ பகுதியில் கடந்த (04.11.2025) மாலை ஒன்றுகூடிய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மக்களிடம் தாயக பேரிடர் நிலமைகளை எடுத்துச் சொல்லி, நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். அனைவரும் பெருமனதோடு தம்மாலான நிதி உதவிகளை வழங்கினர்.

இவ்வாறாக திரட்டப்பட்ட 4005 யூரோ, (நான்காயிரத்தி ஐநூறு) இலங்கை ரூபாயில் 14 53 000 (பதின்நான்கு இலட்சத்தி ஐம்பத்து மூவாயிரம்) ரூபாய், தாயகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மன்னார் பகுதி கிராமங்களுக்கு, பிரான்சு அன்னை பூபதி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் ஊடாக உடனடியாகவே அனுப்பி வைக்கப்பட்டது.

CCTF ஊடகப்பிரிவினர் ஊடாக இத் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here