
பிரான்சு அன்னை பூபதி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தால் தமிழீழ தாயகத்தில் இயற்கையின் பேரழிவால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய கிராமங்களில் வாழும், மனிதநேய உதவிகள் சென்றடையாத மக்களைக் கண்டறிந்து உணவுப்பொருட்களை வழங்கிவருகின்றனர்..
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 38-ஆம் பிரிவு கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது.இவ் உலர் உணவு பொதிகளை வழங்குவதற்கான நிதியினை வழங்கி இருக்கின்றவர்கள் பிரான்ஸ் நாட்டிலே வாழும் எமது தமிழ் உறவுகளின் நிதி பங்களிப்படன் அன்னை பூபதி சமூக மேம்பாட்டு ஒன்றியம் இணைந்து இந்த நிதிநிலை வழங்கியிருக்கின்றார்கள். .. நிகழ்வுக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம சேவையாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய இணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.









