பிரான்சு லியோன் நகரில் சிறப்பாக இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

0
276

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025. பிரான்சு லியோன் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு – லியோன் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 27/11/2025 வியாழக்கிழமை லியோன் நகரில் உள்ள மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மாலை 17h45 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பித்து, “ஏறுது பார் கொடிஏறுது பார் “ என்ற பாடலுடன் தேசிய கொடி திரையில் ஏற்றப்பட்டு, தமிழிழீழத் தேசியத் தலைவரின் 2008 ஆம் ஆண்டு உரை இடம்பெற்றதனைத் தொடர்ந்து
பொதுச்சுடரினை கப்டன் அறிவரசி அவர்களின் சகோதரன் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை வீரவேங்கை விழிமைந்தன் அவரகளின் சகோதரன் ஏற்றிவைத்தார். துயிலும் இல்லப் பாடல் ஒலிக்க மாவீர்ர்களின் உறவினர்கள், பொதுமக்கள் சுடர்களை ஏற்றி வைத்து , மலர்கள் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை செலுத்தினர்.


தமிழர் ஒருங்கினைப்பு குழுவின் அறிக்கை வாசிக்கப்பட்டு , தமிழ்ச்சோலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும், மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள், கவிதைகள், பேச்சுக்கள் இடம்பெற்றன. தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதி லோகநாதன் அருட்செல்வன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. மாவீரர் வெளியீடுகளை மக்கள் விரும்பி ஆர்வத்துடன் வாங்கியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.பிராங்கோ லியோன் தமிழ்ச்சங்க தலைவர் டேவிட் ஸ்ரெலின் மாவீரர் நினைவுரை நிகழ்த்தினார். 2024ஆம் ஆண்டிற்கான மாவீரர் கணக்கறிக்கை திரையில் காண்பிக்கப்பட்டு செயலாளர் , பொருளாளரால் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நினைவேந்தல் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here