சுவிசு பாசல் நகரில் சிறப்பாக இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025

0
111

சுவிசு பாசல் நகரில் 27.11.2025 வியாழக்கிழமை தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வோடு இடம்பெற்றன. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சுவிசின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டு மாவீரத் தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்தியிருந்தனர்..

பொதுச் சுடர் ஏற்றல், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றல், ஈகைச்சுடர் ஏற்றல் என்பன இடம்பெற்று அகவணக்கம் செலுத்தப்பட்டு மவர்வணக்கம் செலுத்தப்பட்டது..

நினைவுரைகள், கலை நிகழ்வுகள் என்பனவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீடுகளும் விற்பனை செய்யப்பட்டன.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

(சுவிசிலிருந்து எரிமலைக்காக வினுயன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here