வள்ளிபுனம் பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள்,உரித்துடையோர் மதிப்பளிப்பு!

0
73

மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்ற

அந்தவகையில் நேற்று 22-11-2025 முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்

சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து மாவீரர்களின் பொதுப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது

இதன்போது கலை நிகழ்வுகளும் மாவீரர்களின் வீரம் தியாகம் அர்ப்பணிப்பு தொடர்பிலான நினைவுரைகளும் இடம்பெற்றன

சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம் எ சுமந்திரன் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய தவிசாளர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மாவீரர்களின் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here