தமிழீழத் தலைநகரான திருமலையில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு!

0
72

மாவீரர் நாளினை முன்னிட்டு, திருமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் பிரான்சு வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் ஆலங்குளம்,ஈச்சந்தீவு,சாம்பல்த்தீவு,கப்பல்த்தீவு,சலப்பையாறு,நிலாவெளி,வரோதயாநகர்,இலுப்பைக்குளம்,பெரியகுளம்,கும்புறுப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் 200 க்கு மேற்பட்டோர் பங்கேற்புடன் திருகோணமலை நகர்ப்பகுதியில் அமைந்துள்ள சர்வோதயா மண்டபத்தில் 22/11/2025இன்று காலை 10:00 மணியளவில் இடம்பெற்றது.
மாவீர்ர்களின் பெற்றோர் இசை வாத்தியங்களுடன் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

முதல் நிகழ்வாக பொதுச்சுடரேற்றல் பொதுபடத்திற்கான மலர் வணக்கத்தினை தொடர்ந்து பெற்றோர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. அதன் பின் அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் மாவீரர்களின் நினைவு சுமந்த உரைகள் நிகழ்த்தப்பட்டது. அத்தோடு பிரதேச மக்கள் ஒன்றுதிரன்டு உணவு சமைத்து பரிமாறி சிறப்பித்தனர். அனைவருடனும் கலந்துரையாடி இறுதியாக மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. உணர்வு பூர்வமான நிகழ்வு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன்,சட்டத்தரணி காண்டீபன், முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவீரர்களின் உறவினர்கள், மக்களென பலர் உணர்வோடு கலந்துகொண்டிருந்தனர்.காண்டீபன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here