
பிரபல வில்லிசை கலைஞர் நாச்சிமார் கோவிலடி இராஜன் அவர்கள் நேற்று 18.11.25 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார் .
பிரான்சில் வாழ்ந்து பின்னர் ஜெர்மனியில் வாழ்ந்து வந்த அமரர் வில்லிசை ராஜன் அவர்கள் தாயகத்தில் இயங்கியதுபோல் வில்லிசை, நாடகம்,, திரைப்படம், நடிப்பு இயக்கம் என்று;தீவிரமாக இயங்கிய இவர் தாயகத்தில் வில்லிசை கலைஞர் கலைவாணர் வில்லிசைகுழு கலா விநோதன் அமரர் சின்னமணி அவர்கள் வில்லிசையில் கோலோச்சிய காலத்தில் வில்லிசையில் இவரும் பெரும் புகழ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் பிரிவில் துயரில் வாடி நிற்கும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.


