
வடமராட்சி கரணவாய் கூடாவளவு பிரதேசத்தில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த இராஜகுலேந்திரன் பிரிந்தன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
இவர் பிரான்சிலிருந்து தனது திருமணத்திற்காக தாயகம் திரும்பிய நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


