டென்மார்க் தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர் சாவடைந்தார்!

0
93

டென்மார்க் தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர் செல்வன் கீர்த்திகன் மோகன் அவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 15.11.2025 சனிக்கிழமை இயற்கை எய்தினார்.

தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து டென்மார்க் தலைநகரில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவரும் கொல்பேக் மாலதி தமிழ் கலைக்கூட விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளருமான செல்வன் கீர்த்திகன் மோகன் அவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக இயற்கை எய்தினார்.
செல்வன் கீர்த்திகன் மோகன் அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர். உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம் என தமிழ் இளையோர் அமைப்பு டென்மார்க் அறிவித்துள்ளது்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here