
தளிரான போதினில் தியாகமாகினீர் !
தளிர்விடும் புலிகளில் நிழலாகினீர் !
கரு நிறைத்து கதை சொல்லும்
வீரவரலாகினீர்.!
கவிபாடி கலைவளர்த்து
எம்முயிராகினீர்.!
நெஞ்சமம் இரும்பாக
கண்கள் நெருப்பாக
விடியலைத்தேடினீர் – நாளை
ஈழம் மலராக விரிகின்ற பொழுதினில்
நீர் வருவீர் நீர் வருவீர் !
அதுவரை காந்தள் மலர்கொண்டு நாம்
வருவோம் உம் காலடி மண் தொழ
கண்ணீரால் அபிசேகம் செய்திட!



