
பிரான்சில் கடந்த 08.11.2012. அன்று வீரச்சாவடைந்த கேணல் பரிதி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று 08.11.2025 சனிக்கிழமை நண்பகல் பாரிஸ் சோதியா கலைக் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி மவர்வணக்கம் செலுத்தினர்.

இங்கு நினைவுகளை ஆற்றிய பிரதம நிர்வாகி செல்வகுமார். அவர்கள் சோதியா கலைக் கல்லூரியின் வளர்ச்சியில் கேணல் பரிதி அவர்கள் உறுதுணையாக இருந்தமை பற்றி கண்ணீர் மல்கத் தெரிவித்திருந்தார்.




