
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்தின் ஆரம்பக்கட்டத் துப்பரவுப்பணியும், மாவீரர்நாள் பணிக்குழுவின் நிர்வாகத்தேர்வும் இடம்பெற்றது.
மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இடத்தில் மலர்தூவி, சுடரேற்றப்பட்டு உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மாவீரர்நாள் பணிக்குழு நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்றதுடன், துயிலுமில்ல வளாகத்தில் ஆரம்பக்கட்ட சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.




