யாழ்.உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்திற்கு நினைவேந்தல் குழு!

0
62

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திற்கான நினைவேந்தல் குழு ஒன்று நேற்று (05) தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கிலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்களை, இணைத்தே குறித்த நினைவேந்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாவீரர்கள் நினைவிடத்திற்கு மாவீரர் செஞ்சேரனின் தந்தை சுடர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து
மலரஞ்சலியை மாவீரர் இன்னிசையின் தந்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கிலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here