
மன்னாரில் உள்ள பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் மற்றும் உள்ளூர் நினைவேந்தல் குழு உறுப்பினர்கள் குறித்த இடத்தை சுத்தம் செய்து , தன்னார்வப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தி குறித்த பணிகள் தொடங்கின, அதைத் தொடர்ந்து கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டன..




