மாவீரர்களின் வரலாற்றைக் கூறும் துயிலும் இல்லங்கள்…!

0
173

வீரர்களுக்கு “மா” என்ற அடை மொழி கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். “மா” என்ற தழுவுசொல் ஒரு அர்த்தமுள்ள உயிர்மெய் எழுத்து. உயிரும் உட லும் கலந்த அர்த்தம் அதாவது உயிர் எழுத்து “ஆ” மற்றும் மெய் எழுத்து “ம்” என் உயிர், மெய் இணைந்து அதில் வெளிப்படு கின்றது.

அழகு, வலிமை, பெருமை, பெரிய, குற்றமற்றவர் என்பன “மா” அடையின் பிற அர்த்தங்களா கும். பழந்தமிழர் வரலாற்றில் மாவீரர் என்ற சொற் பிரயோகம் கிடையாது. விசேட அர்த்தங்க ளோடு மாவீரர் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளாவர். மாவீரர் என்பது ஆண், பெண் இருபாலாரை யும் ஒரு சேரக் குறிக்கும் பொதுச் சொல்.

வரலாற்றில் முதல் ஆண் மாவீரர் லெப். சங்கர் என்றழைக் கப்படும் செல்வச்சந்திரன் சத்திய நாதன் ஆவார்.

இவர் யாழ். வடமராட்சி கம்பர் மலை எனும் கிராமத்தில் 1961 ஜூன் 19 ஆம் நாளில் பிறந்தவர். 1982 நவம்பர் 27 ஆம் திகதி அவர் வீரச்சாவடைந்தார்.

மாவீரர்களின் இறப்பை “வீரச்சா” என்று அழைப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்னுமோர் மரபு. மாவீரர்களின் சாவு தனித்து வமானது. தமிழீழத் தேசியத் தலைவர் “காலத்தால் அழியாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள், எமது மண்ணில் ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள் என்று கூறியுள்ளார்.

லெப் சங்கரின் வீரச்சா நாளான நவம்பர் 27 ஈழத் தமிழர்களாலும் உலகத் தமிழர்களாலும் மாவீரர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. களப்பலியான முதல் புலி மாவீர னும் ஒரு வீரப் பரம்பரையைத் தொடங்கிய முன்னோடியுமான சங்கர். தமிழர் வாழும் நாடெல் லாம் வீடெல்லாம் நினைவு கூறப் படுகிறார். சங்கர் 1982 ஆம் ஆண்டு இறந்திருந்தாலும் 1989 ஆம் ஆண்டு முதலே மாவீரர் நாள் கொண்டா டப்படுகிறது.

விடுதலைப்போரின் ஆரம்ப காலகட்டத்தில், களப்பலியான வீரர்களின் உடல்கள் புதைத்தல், எரித்தல் என்ற இரு வகையாகவும் சிறப்பிக்கப்பட்டன. பெற்றோரின் மதநம்பிக்கை மற்றும் விருப்பத் துக்கு அமைவாகவும், போராளிக ளின் வித்துடல்கள் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்தன. பொது மயானங்களில் அப்போது போரா

ளிகளின் வித்துடல்கள் தகனம் செய்யப்பட்டன அல்லது நல்லடக் கம் செய்யப்பட்டன.அத்தோடு சில சமயங்களில் போராளிகளின் உடல் எரிக்கப்படும் போது புகை எழும் திசையை வைத்து அவர்க ளின் மறைவிடங்களைக் கண்ட றிந்து விடுவார்கள் என்ற காரணத் துக்காக ஆங்காங்கே காடுகள் தோறும் வித்துடல்கள் புதைக்கப் பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப் பாளராகப் பணியாற்றிய ராஜன், உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் போது, “1990 ஆம் ஆண்டு மாவீரர் நாள் தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் அறிக்கை பத்திரிகையிலும் எங்களுடைய புலிகளின்குரல் வானொலியிலும் வெளிவந்திருந்தது. அதைத் தொடர்ந்து அந்த உரை வெளிநாடு களிலும் வெளிவந்தது.

அதேநேரம் பெற்றோர்களைக் கௌரவித்திருந்தோம். ஆலயங்க ளில் மணியோசை அடிக்கும் போது அனைவரும் வீடுகளில் விளக்கேற்றுமாறு கேட்டுக்கொண் டோம். இதைப் போலவே நாங்கள் 89 ஆண்டு 90 ஆம் ஆண்டுகளிலும் செய்திருந்தோம். 1991 ஆம் ஆண்டு நாங்கள் இவ்வாறு சுடலை ஒன் றைக் கட்டிவிட்டோம். அப்போது தான் புதுவை அண்ணை மாவீரர் துயிலும் இல்லம் என்னும் சொற்

பதத்தையும் கூறியிருந்தார். அந்தச் சொற்பதம் கூட்டத்தில் எல்லோரு டைய கூட்டு முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதன் பின்னே 1991 ஆம் ஆண்டு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் கொண்டாடும் மரபு உருவாகியது. என்று கூறியுள்ளார். இதன் போதே தீபம் ஏற்றுவதும், பாடல் பாடுவதும் தொடங்கப் பட்டது.

அதேநேரத்தில் மக்கள் மௌன அஞ்சலியையும் செலுத்தி, ஈகைச் சுடரை ஏற்றி அந்த சமாதிக்கு மேலே அவர்கள் விழுந்து தங்களு டைய பிள்ளைகளின் நினைவுகளை சத்தம் போட்டு அழுது, தங்களு டைய மனச்சுமையை குறைத்ததை பார்க்கக் கூடியதாகவும் இருந்தா கவும்.

இதுவே மாவீரர் துயிலும் இல் லங்களில் வரலாறாகும் அமைகி றது. தற்போது மரபு வழியில் மக் கள் தங்களுடைய பிள்ளைக ளுக்கு பூப்போடுவதும் அதே நேரம் பாடசாலைகளிலிருந்த பிள்ளைகள் வந்து அதனைப் பார்ப்பதும் கிட்டத் தட்ட எமது எதிர்கால வரலாற்றைச் சொல்கின்ற வரலாற்று இடங் களை பார்ப்பதுபோல் பார்க்கின்ற ஒரு சூழலையும் இது ஏற்படுத்தி யிருக்கிறது. அன்றும் சரி இன்றும் சரி ஒரு ஆலயத்தில் மக்கள் கடவு ளுக்கு எப்படி மதிப்பைக் கொடுக் கிறார்களோ அப்படி ஒரு மரபை தோற்றிவிக்கிறது.

முதலாது துயிலும் இல்லம் கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயி லுமில்ல மண்ணில் போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்டதோடு எரிக்கப்பட்டும் வந்தன. 1991 இல் வித்துடல்கள் எரிக்கப்படமாட்டாது. புதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. புதைப்பதால் அது என்றென்றும் தியாகத்தின் சின்ன மாக எமது மண்ணில் நிலைபெறும் என்று இத்தீர்மானம் எடுக்கப் பட்டது.

அதன்பின், முதன்முதலான கப்டன் சோலையின் வித்துடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில் 14 ஜூலை 1991 ஆம் நாள் விதைக் கப்பட்டுள்ளது.

வித்துடல் கிடைக்காமல் போனால் நினைவுக்கற்கள் நாட் டும் வழமையும் உண்டு. அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலும் இல்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலும் இல்லத்திலும் வைப்பதும் இன்னு மொரு வழமையாகும்.

இலங்கையில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் யாழ்ப் பாண மாவட்டத்தில் கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலு மில்லம், சாட்டி மாவீரர் துயிலு மில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், கொடிகா மம் மாவீரர் துயிலும் இல்லம் என்பன உள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலு மில்லம் என்பன உள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில் லம்,விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம், அளம்பில் மாவீரர் துயிலுமில்லம், ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம், வன்னிவிளாங் குளம் மாவீரர் துயிலுமில்லம் என்பன உள்ளன.

மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம் , பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம், முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம் என்பன உள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் கஞ் சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில் லம்-2018, மட்டக்களப்பு மாவட்டம், தரவை மாவீரர் துயிலுமில்லம், தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம், கண்டலடி மாவீரர் துயிலுமில்லம், மாவடி முன்மாரி மாவீரர் துயிலு மில்லம் என்பன உள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம், தியாகவனம் மாவீரர் துயிலு மில்லம், பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம், உப்பாறு மாவீரர் துயிலுமில்லம் என்பன உள்ளன.

மணலாற்றில் ஜீவன்முகாம் உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம், கோடாலிக்கல் – புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம் என்பன உள்ளன.

வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம் உள்ளது.

இவ்வாறாக 20 இற்கும் மேற் பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 20000 இற்கும் மேற்பட்டதாகும்.

இனத்தின் விடுதலைக்காய் மகத்தான தியாகங்களைப் புரிந்து ஈழப் போரிலே தம்முயிர்களை ஈந்த காவியநாயகர்களின் மாபெரும் தியாகங்கள் மூலமே மாபெரும் சாதனைகளைச் செய்ய முடியும் என்பது சான்றோர் வாக்கு. ஏறத் தாழ 40,000 வரையிலான மாவீரர் களை தமிழீழம் கண்டிருக்கிறது. மாவீரர் வரலாறு தியாக வரலா றாக இடம்பெறுகிறது. இதை விட வேறு விளக்கம் சொல்ல முடியாது.

பானுஷா நிமல், ஊடகக் கற்கைகள் துறை, யாழ். பல்கலைக்கழகம்.

நன்றி: மாலைமுரசு (05.11.2025)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here