
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் இன்று 01.11.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு திரான்சிப் பகுதியில் ஆரம்பமாகின.
மாவீரர் பொதுப் படத்திற்கான ஈகைச்சுடரினை மன்னாரில் வீரச்சாவடைந்த 2ம் லெப். அருளானந்தம் அமலன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.
இதேவேளை, திறான்சி தமிழ்ச்சோலை மண்டபத்தில் மாவீரர் குடும்ப உறுப்பினர் ஈகைச்சுடரை ஏற்றி வைக்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் அவர்களின் மாவீரர் நினைவுரையுடன் நடுவர்களின் கருத்துக்களோடு, போட்டிகள் ஆரம்பமாகின.. இப்போட்டிகளில் 700 வரையான போட்டியாளர்கள் பங்கு னபற்றுகின்றனரர் என்பது குறிப்பிடத்தக்கது
போட்டிகள் நடைபெறும் நாள்கள், மண்டபங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் வருமாறு:-
01/11/2025 சனிக்கிழமை
மண்டபம் 1 :
9h : பேச்சு பாலர் (தெரிவு)
10h : பேச்சு அ (தெரிவு)
13h : தனிநடிப்பு
142 rue Roger Salengro 93700 Drancy
Bus 146, 148, Tram 1
மண்டபம் 2 :
9h : பேச்சு ஆ (தெரிவு)
12h : பேச்சு இ (தெரிவு)
13h : கட்டுரை, கவிதை
9 rue Charlot 93700 Drancy
Bus 143, 620
08/11/2025 சனிக்கிழமை
9h : பாட்டு பாலர்
9h : பாட்டு அ
12h : பாட்டு ஆ
16h : பாட்டு இ
16h : பாட்டு ஈ
16h : பாட்டு உ
142 rue Roger Salengro 93700 Drancy
Bus 146, 148, Tram 1
09/11/2025 ஞாயிற்றுக்கிழமை
9h : பேச்சு பாலர்
9h : பேச்சு அ
10h : பேச்சு ஆ
11h : பேச்சு இ
13h : பேச்சு ஈ
13h : பேச்சு உ
9 rue Charlot 93700 Drancy
Bus 143, 620











(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)


