அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் அலக்ஸ்சான்டர் ஐயா சாவடைந்தார்!

0
63

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய அலக்ஸ்சான்டர் ஐயா அவர்கள் தாயகத்தில் சாவடைந்துள்ளார்.

இவரின் மறைவுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. .

அதன் முழு வடிவம் வருமாறு:-

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய அலக்ஸ்சான்டர் ஐயாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சட்டமாமேதை ஜீஜீபொன்னம்பலம் அவரகளுடனும் பின்னர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களுடனும் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டபோது மாமனிதரது மகன் கஜேந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அவர்களுடனும் இணைந்து தமிழ்த் தேசியத்திற்காக அற்பணிப்புடன் பணியாற்றிவர்.

பேசாலையை பிறப்பிடமாகவும் நாவாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். சிமியோன் அலெக்சாண்டர் அவர்கள் 30/10/2025 இன்று காலமானார். அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய இளைப்பாறுதல் பெற வேண்டுவதுடன், அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

துயருடன்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here