
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள நூலகக் கட்டிடத்தின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஆயுதங்களும் வெடிபொருட்களும் நேற்று மாலை (நேற்றுமாலை) மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பொருட்களில் இரண்டு மகசின்களும், அவற்றுக்குரிய 59 துப்பாக்கி ரவைகளும், அத்துடன் 5 அடி நீளமான மின் வயர்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நூலகத்தின் சீலிங் பகுதிக்குள் இந்த ஆபத்தான பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்த பல்கலைக்கழக நிர்வாகம், உடனடியாகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் அளித்தது.
இதனையடுத்து, நேற்று இரவு முதலே பல்கலைக்கழக வளாகத்துக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இன்று காலை கோப்பாய் காவல்துறையினருஞன் இணைந்து விசேட அதிரடிப்படையினரும் (STF) சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
, மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஆயுதங்கள் மற்றும் வயர்களைப் பத்திரமாக மீட்டு, மேலதிக விசாரணைகளுக்காகக் கோப்பாய் காவல்துறை நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த ஆயுதங்கள் அங்கு எதற்காக, யாரால் மறைத்து வைக்கப்பட்டன என்பது குறித்துக் கோப்பாய் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாளை மாவீரர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த ஆயுதங்களைக் காரணமாக வைத்து அங்கு நினைவேநதல்களுக்கு இடையூறு ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


