சட்டவிரோதமாக ஐரோப்பா செல்லும் வழியில் இரு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொலை!

0
173

சட்டவிரோதமாக ஐரோப்பா செல்லும் வழியில் பெலாரஸ் நாட்டு எல்லையில் வைத்து இரு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இருவரில் ஒருவர் கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தரான டிலக்சன் என அறியமுடிகிறது.

கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில் வெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்தார். குறித்த உத்தியோகத்தருடன் மற்றுமொரு இலங்கையரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றைய நாட்டுக்குள் நுழைய முற்பட்ட போது அங்கு வந்திருந்த குறித்த நாட்டு இராணுவத்தினர் சிலர் அவர்களை கடும் சித்திரவதைக்குள்ளாக்கி சுட்டுக் கொன்றதுடன் உடலை ஆற்றுக்குள் வீசியதாகத் தெரியவருகின்றது. 2021ம் ஆண்டிலிருந்து இவ்வாறான ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட 78 பேர் அந்த நாட்டு இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here