
சூரியக் கதிர் நடவடிக்கை அல்லது ரிவிரெச நடவடிக்கை இலங்கையின் முப்படைகளும் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையாகும். அக்டோபர் 17 1995 ஆம் நாள் தொடங்கப்பட்ட ரிவிரெச் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக புலிகள் வசமிருநத யாழ் நகரையும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளையும் கைப்பற்றுவது அமைந்திருந்தது. 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ் நகர் இராணுவ வசப்பட்டதை தொடர்ந்து ரிவிரெச நடவடிக்கை முடிவுற்றது.
நடவடிக்கையின் ஆரம்பநாள் (17.10.1995) யாழ். நகரைக் கைப்பற்றும் இலக்கைக் கொண்ட இந்த நடவடிக்கையின் போது வலிகிழக்கில் உக்கிரமான பெரும் சமர் (70 படையினர் பலி, 7 அதிகாரிகள் உட்பட 150 பேர் காயம். ஒரு டாங்கி, 2 கவச வாகனங்கள் அழிப்பு) திருமலைத் துறைமுகத்தில் கரும்புலிகள் சாதனை, மூன்று கடற்படைக் கப்பல்கள் மூழ்கடிப்பு. 3 கரும்புலிகள் வீரச்சாவு.


