
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான லெப்.கேணல் விக்டர். இயக்கத்தின் தலைசிறந்த போர்த் தளபதிகளில் ஒருவராவார், மன்னார் பிராந்திய தளபதியாக பணியாற்றிய அவர். அடம்பனில் சிங்களப் படையினருடான ஒரு வரலாற்றுச் சண்டையின் போது 12.10.1986 அன்று இதே ஒரு நாளில் களப்பலியானார்.

அவருடைய 39 ஆவது ஆண்டு நினைவு வணக்க நாளான இன்று 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு பணிமனையில் சுடர் ஏற்றி நினைவேந்தப்பட்டது.


