யாழ். கொக்குவில் பிரம்படியில் இந்தியப்படையினால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று 12.10. 2025 காலை 9மணிக்கு நினைவுத்தூபியில் இடம்பெற்றது.
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்களில் இந்திய இராணுவத்தினரால் “ஒப்பரேசன் பவன்” நடவடிக்கை மூலம் மிகவும் மோசமான முறையில் துப்பாக்கியால் சுட்டும், உயிருடன் வீதியிலும் ரயில் தண்டவாளத்திலும் குப்பறப்படுக்க வைத்துக் கவச வாகனங்களினால் நசித்தும் 50 க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









