
வவுனியாவில் அதி வேகத்தில் உந்துருளியில் சென்ற 18 வயது இளைஞன் விபத்தில் பலியாகியுள்ளான்.
வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில இருந்து நெளுக்குளம் நோக்கி உந்துருளி ஒன்றில் 3 இளைஞர்கள் பயணித்துள்ளனர். குறித்த உந்துருளி இராசேந்திரகுளம் பாடசாலை முன்பாகவுள்ள பேருந்து தரிப்பு நிலையத்துள் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குளளானது.
குறித்த விபத்தில் உந்துருளியில் பயணித்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான கோபால்ராஜ் நிலக்சன் என்பவரே உயிரிழந்தவராவார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.


