பிரான்சு ஆர்ஜொந்தேயில் தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி முன்பாக அடையாள உண்ணாவிரதம்!

0
109

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் தியாகச் சாவடைந்த தினமான இன்று 26.09.2025 வெள்ளிக்கிழமை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜொந்தே நகரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் இன்று 38 வது ஆண்டு நினைவேந்தலுடன் காலை 10:00மணி முதல் மாலை 17:00மணி வரை அடையாள உண்ணாவிரதமும் இடம்பெறுகின்றது.
.
எதிர்வரும் (29.09.2025) ஞாயிற்றுக்கிழமை பகல் 14.00 மணிக்கு தியாகதீபம் திலீபனின் நிiனைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கேணல் சங்கர் அவர்களின் 25 வது நினைவேந்தல் நிகழ்வும் லெப்.கேணல் திலீபனின் 38 வது நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here