பார்த்தீபப் பல்லாண்டு-10

0
124

தேய்பிறை நிலவா நீ இல்லையே திலீபா, நின்னுயிர் தேய வளர்ந்திட்ட தியாக ஒளி நீ பாதியில் போகும் வயதில்லையே உனக்கு, பார்த்தீபமே எம்மை ஒருமுறை பாராய்…. வாய்நிறை உரைத்திட்ட வார்த்தைகள் எங்கே, வல்லமை கொடுத்தநின் தோள்களுமெங்கே? தூய நிறத்ததுன் புன்னகையெங்கே, தூயனே நின்விழிப் பார்வையுமெங்கே? போய்விடத் துணிந்துமே புதுவழி படைத்தாய், பொங்கு தமிழுக்கோர் புதுவிதி கொடுத்தாய், தாழ் பணிந்து தொழுதாள் எம் தமிழீழத்தாய், தகை நிறை வல்லமை கொடுத்ததற்காய்… ஊரெழு மைந்தனால் ஊரெழுந்ததை பார்த்தீபன் பாதையில் பார் திரண்டதை, திலீபனின் தியாகத்தில் தீயெரிந்ததை, பாடியே தினந்தினம் தாழ்பணிந்து, கூறிடும் அவன் நாமம் வாழியவே, வாழந்திடப் பல்லாண்டு கூறுதுமே! -காந்தள்- 24/09/2025

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here